முதலாம் கான்ஸ்டன்டைன்
முதல் கிறிஸ்தவ உரோமப் பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் கான்ஸ்டன்டைன் என்று பொதுவாக அழைக்கப்படும் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ் [1] (27 பிப்ரவரி 272 – 22 மே 337)[2] உரோமப் பேரரசர் ஆவார். இவர் கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினர், பைசாந்தியக் கத்தோலிக்கர் ஆகியோர் மத்தியில் புனிதர் கான்ஸ்டன்டைன் எனவும் அறியப்படுபவர்.[3] இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான டியோகிளீசியனால் கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான லிசினியசுடன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் மிலான் ஆணை எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.
முதலாம் கான்ஸ்டன்டைன் | |||||
---|---|---|---|---|---|
உரோமப் பேரரசு | |||||
கப்பிட்டோலீன் அருங்காட்சியகத்தில் உள்ள முதலாம் கான்ஸ்டன்டைன் சிலை. | |||||
ஆட்சி | 25 சூலை 306 – 29 அக்டோபர் 312 29 அக்டோபர் 312 – 19 செப்டெம்பர் 324 19 September 324 – 22 மே 337 (ஒருங்கிணைந்த பேரரசின் பேரரசன்) | ||||
முன்னிருந்தவர் | கான்ஸ்டன்டியஸ் குளோரஸ் | ||||
பின்வந்தவர் | இரண்டாம் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டன்ஸ் | ||||
மனைவிகள் |
| ||||
| |||||
அரச குலம் | கான்ஸ்டன்டிய வம்சம் | ||||
தந்தை | கான்ஸ்டன்டியஸ் குளோரஸ் | ||||
தாய் | கான்ஸ்டண்டினோப்பிளின் ஹெலெனா | ||||
சமயம் | பல கடவுள், பின்னர் கிறிஸ்தவம் |
கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், இலத்தீன் திருச்சபை இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு இவர் செய்த பணிகளுக்காக ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.