அயோத்தி மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
அயோத்தி மாநகராட்சி (Ayodhya Municipal Corporation), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 16 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி அயோத்தி மாவட்டத்தின் அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு, மே, 2017ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டதாகும்.
விரைவான உண்மைகள் அயோத்தி மாநகராட்சி श्री अयोध्या जी नगर निगम, வகை ...
அயோத்தி மாநகராட்சி श्री अयोध्या जी नगर निगम | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | ரிஷிகேஷ் உபாத்தியா (பாரதிய ஜனதா கட்சி) |
உறுப்பினர்கள் | 60 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | நவம்பர், 2017 |
வலைத்தளம் | |
http://www.nagarnigamayodhya.in/en |
மூடு
அயோத்தி நகராட்சி மற்றும் பைசாபாத் நகராட்சிகளை இணைத்து, அயோத்தி மாநகராட்சி, மே 2017 அன்று உத்தரப் பிரதேச அரசு நிறுவியது. 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 2,21,118 மக்கள்தொகை கொண்ட அயோத்தி மாநகராட்சி, 60 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1]
மேலும் மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இப்புதிய இரண்டு மாநகராட்சிகளுடன், உத்தரப் பிரதேசம் 16 மாநகராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]