இலாகூர் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
இலாகூர் அருங்காட்சியகம் (Lahore Museum) என்பது பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது 1865 ஆம் ஆண்டில் ஒரு சிறிய இடத்தில் நிறுவப்பட்டது. 1894 ஆம் ஆண்டில் பிரிட்டிசு காலனித்துவ காலத்தில் இலாகூரில் உள்ள 'தி மால்' என்ற இடத்தில் அதன் தற்போதைய இடத்தில் திறக்கப்பட்டது. இலாகூர் அருங்காட்சியகம் பாக்கித்தானின் அதிகம் பார்வையிடப்பட்ட மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகமாகும். இது தெற்காசியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். [1]
அருங்காட்சியகத்தின் நுழைவாயில் | |
நிறுவப்பட்டது | 1865, பின்னர் தற்போதைய இடத்திற்கு 1894 இல் மாற்றப்பட்டது |
---|---|
அமைவிடம் | த மால், லாகூர் பஞ்சாப் பாக்கித்தான் |
ஆள்கூற்று | 31.568226°N 74.308174°E / 31.568226; 74.308174 |
வகை | தொல்லியல், ஓவியம், பாரம்பரியம், நவீன வரலாறு, மதம் |
சேகரிப்பு அளவு | வரலாற்றுக்கு முந்தையத் ஹொகுப்பு, நாணயங்கள், இந்து பௌத்த மற்றும் சமண, காந்தார, இசுலாமிய, கையெழுத்துப் பிரதிகள், மாதிரி ஓவியங்கள், பொது சேகரிப்பு, ஆயுதங்கள், இனவியல், கடிதங்கள் மற்றும் முத்திரைகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள், தற்கால ஓவியங்கள், பாக்கித்தான் இயக்கத்தின் தொகுப்பு |
வருனர்களின் எண்ணிக்கை | 2005 கணக்கின் படி 250,000 பேர் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முன் நேரடியாக அமைந்துள்ள ஜம்ஸாமா துப்பாக்கியுடன் அமைந்துள்ளது. இரட்யார்ட் கிப்ளிங் எழுதிய புகழ்பெற்ற கிம் என்ற பிரிட்டிசு புதினத்தில் பிரபலமானது - அவரின் தந்தை அருங்காட்சியகத்தின் ஆரம்பகால கண்காணிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். பண்டைய இந்தோ-கிரேக்க மற்றும் காந்தார இராச்சியங்களிலிருந்து பௌத்தக் கலைகளின் விரிவான சேகரிப்புக்காக இந்த அருங்காட்சியகம் இப்போது புகழ்பெற்றது. இது முகலாயப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் இந்தியாவில் உள்ள பிரித்தானியப் பேரரசு ஆகியவற்றின் சேகரிப்பையும் கொண்டுள்ளது. [2]