பிரமிடு நூல்
From Wikipedia, the free encyclopedia
பிரமிடு நூல்கள் (Pyramid Texts) பண்டைய எகிப்தியர்களின் மிகவும் பழைமையான சமய இறுதிச் சடங்கு நூல்களில் ஒன்றாகும்.[1][2] இந்த பிரமிடு நூல்கள் பண்டைய எகிப்திய மொழியின் பட எழுத்துகளில், பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட (கிமு 2686 – 2181) ஐந்தாம் வம்சம், ஆறாம் வம்சம், ஏழாம் வம்சம் மற்றும் முதல் இடைநிலைக்காலத்திய எட்டாம் வம்சத்தவர்கள் ஆட்சிக் காலத்தில் சக்காரா நகரத்தின் பிரமிடுகளின் நிலத்தடி சுவர்கள் மற்றும் கல் சவப்பெட்டிகளில் செதுக்கப்பட்டிருந்தது.[3][4]பழைய எகிப்து இராச்சியத்திற்கும், மத்தியகால எகிப்தி இராச்சியம் மற்றும் புது இராச்சிய காலத்திற்கிடையே பிரமிடு நூல்களின் பயன்பாடு முற்றிலும் மறைந்தது. பழைய இராச்சியக் காலத்திய பிரமிடு நூல்கள் இறந்த எகிப்திய மன்னர்களான தேத்தி, முதலாம் மெரென்ரே, முதலாம் பெப்பி, இரண்டாம் பெப்பி மற்றும் அவர்தம் இராணிகளை சக்கரா நகரத்தில் புதைத்த பிரமிடுகளின் அடித்தளச் சுவரிலும், சவப்பெட்டிகளில் பிரமிடு நூலின் உரைகள் செதுக்கப்பட்டிருந்தது.[5]
இந்நூலின் காலம் ஏறத்தாழ கிமு 2400 - கிமு 2300-க்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.[6] புது எகிப்திய இராச்சியத்தின் சவப்பெட்டி நூல் மற்றும் இறந்தோர் நூல் போலன்றி, பிரமிடு நூல்களில் இறந்த பார்வோன்களையும், இராணிகளை மட்டுமே குறித்துள்ளது.[7]