பழைய எகிப்து இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பழைய எகிப்து இராச்சியத்தின் வரலாறு கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது.[1] இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை மம்மியாக்கி அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இந்த பழைய எகிப்து இராச்சியத்தை மூன்றாம் வம்சத்தவர் முதல் ஆறாம் வம்சத்தினர் வரை கிமு 2681 முதல் கிமு 2181 முடிய 500 ஆண்டுகள் ஆண்டனர்.
பழைய எகிப்து இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2686–கிமு 2181 | |||||||||
தலைநகரம் | மெம்பிசு | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
• கிமு 2686 – 2649 | மூன்றாம் வம்ச மன்னர் ஜோசெர் (முதல்) கிமு 2686 – 2613 | ||||||||
ஆறாம் வம்ச மன்னர் நெயிட்டு குவர்டி சிப்தா அல்லது 7/8-ஆம் வம்சத்தின் நேபெரிர்கரே (இறுதி) | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 2686 | ||||||||
• முடிவு | கிமு 2181 | ||||||||
|
பழைய எகிப்திய இராச்சியத்தின் நான்காம் வம்ச மன்னர் சினெபெரு என்பவர் பிரமிடு கட்டிடக் கலை நுணுக்கத்தை நன்கறிந்தவர். இவ்வம்சத்தின் கூபு, காப்ரா, மற்றும் மென்கௌரே போன்ற மன்னர்கள் புகழ்பெற்ற கிசா பிரடுமிகளைக் கட்டினர்.[2] பண்டைய எகிப்து தனது நாகரீகத்தை, பழைய எகிப்து இராச்சியத்தின் ஆட்சிக் காலம் முதல், எகிப்தின் மத்தியகால இராச்சியம் மற்றும் புது எகிப்து இராச்சியம் வரை நைல் சமவெளியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
பழைய எகிப்து இராச்சியம் என்ற சொல்லை, பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றாளர்கள், துவக்கால முதலிரண்டு வம்சங்களின் ஆட்சிக் காலத்துடன் வேறுபடுத்திக் காண்பிக்கவே பயன்படுத்தினர். துவக்க கால எகிப்தின் முதலிரண்டு வம்ச மன்னர்களின் மற்றும் பழைய எகிப்திய இராச்சியத்தின் முதல் மன்னர்களின் தலைநகரமாக மெம்பிஸ் விளங்கியது.
மேற்படி இரண்டு எகிப்திய ஆட்சியாளர்களின் காலப்பகுதிகளை, புகழ்பெற்ற பெரிய அளவிலான பிரமிடுக் கட்டிடக் கலையும், பொருளாதார வளர்ச்சியுமே வேறுபடுத்தி காட்டுகிறது.[3]
எகிப்தின் பழைய இராச்சியமானது, எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர்களின் ஆட்சியிலிருந்து, ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலமான கிமு 2686 – கிமு 2181 வரையிலான பகுதியாக கணக்கிடப்படுகிறது.
பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் பார்வோன்கள் என அழைக்கப்படவில்லை. ஆனால் புது எகிப்திய இராச்சிய ஆட்சியின் போது கடவுள்களுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்ற மன்னர்களை பார்வோன்கள் என்றழைத்தனர்.[4]
எகிப்தின் மூன்றாம் வம்சத்தின் பழைய எகிப்திய இராச்சியத்தின் முதல் மன்னர் ஜோசெர் ஆட்சிக் காலத்தில், எகிப்தின் தலைநகரம் மெம்பிசுக்கு மாற்றப்பட்டது.
இவரது ஆட்சியில் சக்காரா பகுதியில் கற்களாலான படிக்கட்டுகள் அமைப்பில், பிரமிடு கட்டிடக் கலையின் புதுயுகம் துவங்கியது.[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தில் இறந்த மன்னர்கள், அரசிகள், அரச குடும்பத்தினர்கள் மற்றும் அரசவை பிரபுக்களுக்குத் தக்கவாறு, அவர்களது பிணங்களைப் பதப்படுத்தி மம்மியாக்கி, பிரமிடுகளில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர். இக்காரணத்திற்காக பழைய எகிப்திய இராச்சியத்தின் காலம் பிரமிடுகளின் காலம் என அழைக்கப்படுகிறது.