மலாயா அவசரகாலம்
From Wikipedia, the free encyclopedia
மலாயா அவசரகாலம் (மலாய்: Darurat Malaya; ஆங்கிலம்: Malayan Emergency சீனம்: 馬來亞緊急狀態) என்பது 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய மலாயாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும்.[1][2]
மலாயா அவசரகாலம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிரித்தானிய பனிப்போர் பகுதி | |||||||
1950களில் ஆஸ்திரேலியாவின் ஆவ்ரோ லிங்கன் வகையைச் சேர்ந்த போர் விமானம் மலாயாக் காடுகளில் வெடிகுண்டுகளைப் போடுகிறது. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கம்யூனிஸ்டு எதிர்ப்புப் படையினர் ஐக்கிய ராஜ்ய படையினர் ஆஸ்திரேலியா | கம்யூனிஸ்டு படைகள் மலாயா கம்யூனிஸ்டு கட்சி
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹாரோல்ட் பிரிக்ஸ் ராய் உருகுவார்ட் ஹென்றி கர்னி† ஜெரால்ட் டெம்பிளர் ஹென்றி வேல்ஸ் | சின் பெங் | ||||||
பலம் | |||||||
250,000 மலாயா உள்ளூர் பாதுகாப்பு படையினர் 40,000 பொதுநலவாயப் படையினர்
37,000 சிறப்புக் காவல் படையினர்
| 150,000 கம்யூனிஸ்டுகள்
|
||||||
இழப்புகள் | |||||||
இறந்தவர்கள்: 1,346 மலாயா காவல் பாதுகாப்பு படையினர் 519 பிரித்தானிய இராணுவத்தினர் காயம் அடைந்தவர்கள்: 2,406 மலாயா, பிரித்தானிய படையினர் பொதுமக்களின் சேதம்: 2,478 இறப்பு, 810 காணாமல் போனவர்கள் | இறந்தவர்கள்: 6,710 காயம் அடைந்தவர்கள்: 1,289 பிடிபட்டவர்கள்: 1,287 சரண் அடைந்தவர்கள்: 2,702 |
பிரித்தானிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போர் (Anti–British National Liberation War) என்றும் இந்தக் காலக் கட்டம் அறியப்படுகிறது. அத்துடன் பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது, மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பொதுநலவாயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.[3][4][5]
மலாயா தேசிய விடுதலை படை (Malayan National Liberation Army) (MNLA) என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போர்க் காலத்தை மலாயா அவசரகாலம் என்று அழைத்த்னர். ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினர் அந்தக் காலக் கட்டத்தை 'தேசிய பிரித்தானிய எதிர்ப்பு விடுதலைப் போர்' என்று அழைத்தனர்.