எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் பதினெட்டாம் வம்சம் (Eighteenth Dynasty of Egypt) (Dynasty XVIII), எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட அரசமரபாகும். இவ்வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் புது எகிப்து இராச்சியம் அரசியல், சமூகம் மற்றும் கட்டிடக் கலைகளில் பெரும் புகழுடன் விளங்கியது. இவ்வம்சத்தை நிறுவியவர் முதலாம் அக்மோஸ் ஆவார். இப்பதினெட்டாம் வம்சம் பண்டைய எகிப்தை கிமு 1549/1550 முதல் கிமு 1292 முடிய 258 ஆண்டுகள் ஆண்டது. இப்பதினெட்டாவது வம்ச பார்வோன்களில் நான்கு பேர் தூத்மோஸ் என்ற பெயர் கொண்டதால், இவ்வம்சத்தை தூத்மோஸ் வம்சம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வம்சத்தாருக்கும் மெசொப்பொத்தோமியாவின் மித்தானி இராச்சியத்தினருக்கும் இடையே கடும் பகை இருந்தது.
புது எகிப்து இராச்சியம் 18-ஆம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1549–கிமு 1292 | |||||||||
தலைநகரம் | தீபை, அமர்னா | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1549 | ||||||||
• முடிவு | கிமு 1292 | ||||||||
|
இவ்வம்சத்தின் முதலாம் அக்மோஸ், அக்கெனதென், துட்டன்காமன், மூன்றாம் அமென்கோதேப் உள்ளிட்ட பார்வோன்களில் பலர் புகழுடன் விளங்கினர். துட்டகாமனின் சிற்பங்களை ஹேவர்டு கார்ட்டர் என்பவரால் 1922-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டைய எகிப்தை ஆண்ட பல அரசமரபுகளில், பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்களில் இராணிகள் நெஃபர்டீட்டீ மற்றும் ஆட்செப்சுட்டு ஆகிய இரண்டு பெண் ஆட்சியாளர்கள் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டது குறிப்பிடத்தக்கது. [1]