துங்கு அப்துல் ரகுமான்
மலேசியாவின் முதல் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
துங்கு அப்துல் ரகுமான் அல்லது துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ் (Tunku Abdul Rahman Putra Al-Haj ibni Almarhum Sultan Abdul Hamid Halim Shah பிப்ரவரி 8, 1903 — டிசம்பர் 6, 1990) என்பவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். மன்னர் பரம்பரை வழி பிறந்த துங்கு அப்துல் ரகுமான் சுதந்திர தந்தை எனவும் மலேசிய தந்தை (மலாய்: Bapa Kemerdekaan), (ஆங்கில மொழி: Father of Independence) எனவும் இன்று வரை போற்றப்படுகிறார்.[1]
துங்கு அப்துல் ரகுமான் Tunku Abdul Rahman 东姑阿都拉曼 | |
---|---|
முதலாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22 | |
ஆட்சியாளர்கள் | 1. அப்துல் ரஹ்மான் நெகிரி செம்பிலான் 2. அகமட் ஷா பகாங் 3. ஹிஷாமுடின் சிலாங்கூர் 4. இஸ்மாயில் நசிருடின் திரங்கானு |
Deputy | துன் அப்துல் ரசாக் உசேன் |
பின்னவர் | துன் அப்துல் ரசாக் உசேன் |
முதலாவது மலேசியத் துணைப் பிரதமர் | |
பின்னவர் | துன் அப்துல் ரசாக் உசேன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1903-02-08)8 பெப்ரவரி 1903 அலோர் ஸ்டார், கெடா, மலாயா (இப்போது மலேசியா) |
இறப்பு | 6 திசம்பர் 1990(1990-12-06) (அகவை 87) கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு |
துணைவர்(கள்) | 1. மரியம் சோங் (1933–1935) 2. வயலட் கால்சன் (1935–1946) 3. ஷாரிபா ரோட்சியா (1939–1990) 4. பிபி சோங் |
பிள்ளைகள் | எட்டு பிள்ளைகள் (4 வளர்ப்பு பிள்ளைகள்) |
முன்னாள் கல்லூரி | 1. அலோர் ஸ்டார் மலாய்ப் பள்ளி (1909) 2. தெப்சிரின் பள்ளி பாங்காக் (1913) 3. பினாங்கு பிரி ஸ்கூல் (1916) 4. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் (1925) 5. இன்னர் டெம்பிள் (1949) (சட்டத் துறை) |
தொழில் | வழக்குரைஞர் |
இவர் 31-ஆம் திகதி ஆகத்து மாதம் 1957 இல், மலேசியா என்று அழைக்கப்படும் அன்றைய மலாயாவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார். இவர் மலாய், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய இனங்களை ஒருமைப்படுத்தி மலேசிய கூட்டணி கட்சியை உருவாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், அறிவு பூர்வமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தவர்.[2]
துங்கு அப்துல் ரகுமான், துன் டான் செங் லோக் மற்றும் துன் வீ.தி. சம்பந்தன் ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1963 இல் மலாயாவுடன் சபா, சரவாக் மாநிலங்களை இணைத்து மலேசியாவை உருவாக்க, துங்கு அப்துல் ரகுமான் பெரும் பங்கு வகித்தார். இவர் 1955 இல் இருந்து 1957 வரை மலாயா கூட்டரசு பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.