பூமிபால் அதுல்யாதெச்
From Wikipedia, the free encyclopedia
பூமிபோன் அடூன்யடேட் அல்லது பூமிபால் அதுல்யாதெச் (Bhumibol Adulyadej, (தாய்: ภูมิพลอดุลยเดช) பிறப்பு: 5 டிசம்பர் 1927, இறப்பு 13 அக்டோபர் 2016) என்பவர் தாய்லாந்தின் தற்போதைய அரசர் ஆவார். இவர் ஒன்பதாம் இராமா என அழைக்கப்படுகிறார். 1946 சூன் 9 இல் ஆட்சிக்கு வந்த இவரே உலகில் அதிக காலம் நாட்டுத் தலைவராகவும், தாய்லாந்து வரலாற்றில் அதிக காலம், தமது எண்பதாவது வயதில் இறக்கும் வரை மன்னராகவும் இருந்தவராவார்.[1]
பூமிபால் அதுல்யாதெச் Bhumibol Adulyadej | |
---|---|
2010 இல் பூமிபால் | |
தாய்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 9 சூன் 1946 – இன்று (77 ஆண்டுகள், 338 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 5 மே 1950 |
முன்னையவர் | ஆனந்தா மகிதோல் |
வாரிசு | வச்சிரலோங்கோன் |
பிறப்பு | (1927-12-05)5 திசம்பர் 1927 கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | 13 அக்டோபர் 2016(2016-10-13) (அகவை 88) தாய்லாந்து |
புதைத்த இடம் | |
Consort | சிரிக்கித் (1950 ஏப்ரல் 28 முதல்) |
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசி ராஜகன்னிய பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் இளவரசி சிரிந்தோர்ன் இளவரசி வலைலாக் |
மரபு | மகிதோல் அரண்மனை சக்கிரி வம்சம் |
தந்தை | மகிதோல் அதுல்யாதெச் |
தாய் | சிறீநகரிந்திரா |
மதம் | பௌத்தம் |
கையொப்பம் |
பூமிபால் அதுல்யாதெச் | |
"தாய்" மொழிப் பெயர் | |
---|---|
தாய் | ภูมิพลอดุลยเดช |
RTGS | Phumiphon Adunyadet |
பூமிபால் சட்டபூர்வமாக அரசியல்சட்ட மன்னராக இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறார். இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் 15 இராணுவப் புரட்சிகளும், 16 அரசியலமைப்புச் சட்டங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 27 பிரதமர்கள் அரசுத்தலைவர்களாக இருந்துள்ளனர்.[2] 1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மன்னர் பூமிபால் தாய்லாந்து மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும்[3][4] போற்றப்படுபவராகவும் உள்ளார்.[5] சட்டபூர்வமாக இவர் "அவமதிக்கப்பட முடியாதவராக" உள்ளார். அரசரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர்.[5] 1957 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மன்னரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்தமையே காரணம் என நியாயப்படுத்தப்பட்டது.[6][7] தனது 2005 ஆம் ஆண்டு உரையில், பொதுமக்களிடம் இருந்து விமரிசனங்களை அனுமதித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.[8] ஃபோர்ப்ஸ் இதழின் படி, பூமிபாலின் சொத்துக்களின் மதிப்பு (2010 ஆம் ஆண்டில்) 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்,[9] போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பணக்கார அரசர்களில் முதலாவதாகப் பட்டியலிட்டுள்ளது.[10][11]