மெரிம்தி பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
மெரிம்தியப் பண்பாடு (Merimde culture orMerimde Beni-Salame or Benisalam) புதிய கற்காலத்தின் போது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் கீழ் எகிப்தில் உள்ள நைல் வடிநிலப் பகுதியில் கிமு 4,800 முதல் கிமு 4,300 முடிய 500 ஆண்டுகள் விளங்கிய பண்பாட்டுக் காலம் ஆகும்.[1] இப்பண்பாட்டிற்கு முன்னர் பையூம் (அ) பண்பாடு செழித்து விளங்கியது. இதன் சமகாலத்தில் மேல் எகிப்தில் பதாரியப் பண்பாடு மற்றும் தஸ்சியப் பண்பாடுகள் விளங்கியது. இப்பண்பாட்டுக் காலத்திற்குப் பின்னர் பண்டைய எகிப்தில் அமராத்தியப் பண்பாடு தொடங்கியது.
மெரிம்தி பண்பாடு | |
---|---|
கிமு 4000-ஆண்டின் துவக்க காலத்திய மெரிம்தி பண்பாட்டின் களிமண் சிலையின் தலை
| |
புவியியல் பகுதி | எகிப்து |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | கிமு 4,800 — 4,300 |
இயல்புகள் | சமகாலப் பண்பாடுகள்: தஸ்சியப் பண்பாடு மற்றும் பதாரியப் பண்பாடு |
முந்தியது | பையூம் அ பண்பாடு |
பிந்தியது | அமராத்தியப் பண்பாடு |
எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு வடமேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் நைல் வடிநிலத்தில் அமைந்த மெரிம்தி பெனி சலாமா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு பெயராயிற்று. மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களத்தை ஜெர்மானிய தொல்லியல் அறிஞர் ஹெர்மென் ஜங்கர் என்பவர் 1928-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார்.[2][3]