இரண்டாம் மெகமுது
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் மெகமுது (Mehmed II; உதுமானியத் துருக்கியம்: محمد ثانى; நவீன துருக்கியம்: II. Mehmet; 30 மார்ச் 1432 – 3 மே 1481), பொதுவாக மெகமுது, வெற்றியாளர் (Mehmed the Conqueror; துருக்கியம்: Fatih Sultan Mehmet), என்பவர் உதுமானிய சுல்தானாக 1444 ஆகத்து முதல் 1446 செப்டம்பர் வரையும், பின்னர் 1451 பெப்ரவரி முதல் 1481 மே வரை ஆட்சி புரிந்தார். இவரது முதலாவது ஆட்சியின் போது, யோன் உனியாடியின் தலைமையிலான சிலுவைப் போரை வெற்றி கொண்டார். 1451 இல் மீண்டும் ஆட்சியேறிய போது, உதுமானியரின் கடற்படையை வலிமைப்படுத்தி கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்.
இரண்டாம் மெகமுது | |||||
---|---|---|---|---|---|
சுல்தான், உதுமானியப் பேரரசு கைசர்-இ ரூம் இரு நிலங்களின் சுல்தான், இரன்டு கடல்களின் கான்[1] பாதிசா | |||||
சுல்தான் இரண்டாம் மெகமுது, 1480 | |||||
உதுமானிய சுல்தான் | |||||
முதலாம் ஆட்சி | ஆகத்து 1444 – செப்டம்பர் 1446 | ||||
முன்னையவர் | இரண்டாம் முராது | ||||
பின்னையவர் | இரண்டாம் முராது | ||||
2-வது ஆட்சி | 3 பெப்ரவரி 1451 – 3 மே 1481 | ||||
முன்னையவர் | இரண்டாம் முராது | ||||
பின்னையவர் | இரண்டாம் பயேசிது | ||||
பிறப்பு | 30 மார்ச் 1432 எதீர்னி, உதுமானியப் பேரரசு | ||||
இறப்பு | 3 மே 1481(1481-05-03) (அகவை 49) கேப்சி, உதுமானியப் பேரரசு | ||||
புதைத்த இடம் | பாத்தி பள்ளிவாயல், இசுதான்புல் | ||||
அரசிகள் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
வம்சம் | உதுமானியர் | ||||
தந்தை | இரண்டாம் முராது | ||||
தாய் | ஊமா | ||||
மதம் | சுன்னி இசுலாம்[2][3] | ||||
Tughra |
தனது 21-வது அகவையில், கான்ஸ்டண்டினோபிலைக் (இன்றைய இசுதான்புல்) கைப்பற்றினார். இதன் மூலம் பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார். அக்காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகராக கான்ஸ்டண்டினோபில் விளங்கியிருந்தது. இதனால், மெகுமெது உரோமைப் பேரரசின் "சீசர்" (Qayser-i Rûm) பட்டத்திற்கும் உரிமை கோரினார். இவர் தனது வாழ்வுக் காலத்தில் உதுமானியப் பேரரசை உரோமைப் பேரரசின் தொடர்ச்சியாகவே கருதி வந்திருந்தார்.
மெகுமெது தொடர்ந்து அனத்தோலியாவைக் கைப்பற்றி ஒருங்கிணைத்தார். தென்கிழக்கு ஐரோப்பாவில் பொசுனியா வரை கைப்பற்றினார். உள்நாட்டில் அவர் பல அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தார், அவரது ஆட்சியின் முடிவில், அவரது மறுகட்டுமானத் திட்டம் நகரத்தை ஒரு வளர்ந்து வரும் ஏகாதிபத்திய தலைநகராக மாற்றியது. நவீன கால துருக்கி மட்டுமல்லாது, பரந்த முசுலிம் உலகின் பல பகுதிகளில் இவர் ஒரு வீரராகக் கருதப்படுகிறார். இஸ்தான்புல்லின் பாத்தி மாவட்டம், பாத்தி சுல்தான் மெகுமது பாலம், பாத்தி மசூதி ஆகியவை இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டவை ஆகும்.