அயோத்தி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அயோத்தி மாவட்டம் முன்னர் இதன் பெயர் பைசாபாத் மாவட்டம் என இருந்தது. பைசாபாத் மாவட்டத்தின் பெயரை, அயோத்தி மாவட்டம் என மாற்றப்படுவதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 6 நவம்பர் 2018 அன்று அறிவித்தார்.[1][2][3][4][5][6] [7][8][9]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
அயோத்தி மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | அயோத்தி கோட்டம் |
தலைமையகம் | அயோத்தி |
பரப்பு | 2,522 km2 (974 sq mi) |
மக்கட்தொகை | 2470996 (2011) |
படிப்பறிவு | 70.63 % |
பாலின விகிதம் | 961 |
வட்டங்கள் | 5 |
மக்களவைத்தொகுதிகள் | 1 பைசாபாத் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
அயோத்தி கோட்டத்தில் அமைந்த அயோத்தி மாவட்டத்தின் தலைமையகம் சரயு ஆற்றின் கரையில் அமைந்த அயோத்தி மாநகராட்சியில் உள்ளது. இந்த மாவட்டம் 2,522 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. அயோத்தி மாவட்டத்தின் பெரிய நகரமான பைசாபாத் நகரத்தில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கலைகழகம் அமைந்துள்ளது.