பாபர் மசூதி
முஸ்லிம் மன்னர் பாபர் கட்டிய பள்ளிவாசல் / From Wikipedia, the free encyclopedia
பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது இராமர் பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது[1]. இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் டிசம்பர் 6, 1992 இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது.[2][3][4]
பாபர் மஸ்ஜித் | |
---|---|
19 ஆம் நூற்றாண்டின் சாமுவேல் போர்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அயோத்தி, உத்தர பிரதேசம், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 26.7956°N 82.1945°E / 26.7956; 82.1945 |
சமயம் | இஸ்லாம் |
மசூதி ராம்கோட் ("ராமரின் கோட்டை") என்று அழைக்கப்படும் ஒரு மலையில் அமைந்துள்ளது.[5] முகலாயர்கள் அந்த இடத்தில் இருந்த ராமர் கோயிலை அழித்தார். அங்கு கோவில் இருப்பதை முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை.[6] இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சர்ச்சைக்குரிய இடத்தில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. அகழ்வாராய்ச்சியின் போது பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன, இது கீழே ஒரு இந்து அமைப்பு இருப்பதைக் குறிக்கிறது. மேலும், பாபர் மசூதி காலி நிலத்தில் கட்டப்படவில்லை என்றும், தோண்டப்பட்ட கட்டிடம் இஸ்லாமிய இயல்புடையது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.[7][8][9]
இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் அயோத்தி மன்னரென இராமாயணம் மற்றும் புராணங்களில் கூறப்படும் குழந்தை ராமனின் கோயில் ஒன்றை பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி என்பவர் உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அயோத்தியில் இம்மசூதியே மிகப் பெரியதாகும்.இந்த பாபர் மசூதியை இடித்து 5. ஆகத்து 2020 ல் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.[10]