உரூக் காலம்
From Wikipedia, the free encyclopedia
உரூக் காலம் (Uruk period) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் ஏறத்தாழ:கிமு 4000 முதல் கிமு 3100 முடிய விளங்கியது. இதனை ஆதி எழுத்தறிவு காலம் என்றும் அழைப்பர். தொல்பழங்காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் செப்புக் காலம் முதல் துவக்க வெண்கலக் காலம் முடிய உரூக் நகரத்தில் இக்காலம் துவங்கியது.
உரூக் காலம் | |
---|---|
புவியியல் பகுதி | மெசொப்பொத்தேமியா |
காலப்பகுதி | செப்புக் காலம் |
காலம் | கிமு 4000–3100 |
வகை களம் | உரூக் |
முந்தியது | உபைதுகள் காலம் |
பிந்தியது | செம்தேத் நசிர் காலம் |
மெசொப்பொத்தேமியாவில் உரூக் காலத்திற்கு முன்னர் உபைதுகள் காலமும், பின்னர் செம்தேத் நசிர் காலமும் விளங்கியது.[1][2] துவக்க செப்புக் கால்த்திய, பிந்திய உரூக் காலத்தில் (கிமு 34 முதல் 32 வது நூற்றாண்டு முடிய) துவக்க கால ஆப்பெழுத்து வடிவ எழுத்துக்கள் எழுத்ப், படிக்க பயன்படுத்தப்பட்டது.[3]
உரூக் காலத்தில் மண்ட்பாண்டங்களுக்கு வர்ணம் தீட்டும் வழக்கம் வீழ்ச்சி அடைந்தது, உருளை முத்திரைகளும் செப்புப் பாத்திரங்களும், உருளை முத்திரைகளும் பயன்பாட்டிற்கு வந்தது.[4]
உரூக் காலத்தை பழைய உரூக் காலம், மத்திய உரூக் காலம் மற்றும் பிந்தைய உரூக் காலம் என மூன்றாக் பிரிப்பர். இதில் பழைய உரூக் காலம் மற்றும் மத்திய உரூக் காலம் குறித்தான செய்திகள் மிகக்குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளது. பிந்திய உரூக் காலம் கிமு 3100 வரை தொடர்ந்தது.[9] பிந்திய உரூக் காலத்தில் பண்டைய அண்மை கிழக்கு முழுவதும் உரூக் பண்பாடு பரவியது.