பஞ்சாப் (இந்தியா)
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.
பஞ்சாப் மாநிலம்
State of Punjab ਪੰਜਾਬ | |
---|---|
சின்னம் | |
அடைபெயர்(கள்): ஐந்து ஆறுகளின் நிலப்பரப்பு | |
இந்தியாவில் பஞ்சாபின் அமைவிடம் | |
பஞ்சாபின் நிலவரை | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966 (1966-11-01) |
தலைநகர் | சண்டிகர்† |
பெரிய நகரம் | லூதியானா |
மாவட்டங்கள் | 22 |
அரசு | |
• ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
• முதலமைச்சர் | பகவந்த் மான் |
• சட்டமன்றம் | ஓரவை முறைமை (117 தொகுதிகள்) |
• மக்களவை | 13 |
• உயர் நீதிமன்றம் | பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 50,362 km2 (19,445 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 20-ஆவது |
உயர் புள்ளி | 550 m (1,800 ft) |
தாழ் புள்ளி | 150 m (490 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 2,77,04,236 |
• தரவரிசை | 16-ஆவது |
• அடர்த்தி | 550/km2 (1,400/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | பஞ்சாபி |
• ஏனையவை | இந்தி, ஆங்கிலம் |
• பிராந்திய மொழிகள் | மாஜி, மால்வாய், தோக்ரி, பாக்ரி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-PB |
ம.மே.சு. | 0.679 (medium) |
ம.மே.சு. தரம் | 9-ஆவது (2005) |
படிப்பறிவு | 76.68% |
இணையதளம் | பஞ்சாப் அரசு |
^† அரியானாவுடன் இணைந்த தலைநகரம் | |
சின்னங்கள் | |
சின்னம் | அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி |
மொழி | பஞ்சாபி |
நடனம் | பாங்கரா, கித்தா |
விலங்கு | புல்வாய் |
பறவை | பாசு[2] |
மரம் | தாலி |
ஆறு | சிந்து |
விளையாட்டு | கபடி (வட்டவகை) |
பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.
வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3] பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999–2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
வேளாண்மை பஞ்சாபின் மிகப்பெரும் தொழிலாக விளங்குகின்றது.[4] அறிவியல் கருவிகள், வேளாண்மைக்கான கருவிகள், மின்னியல் கருவிகள் தயாரிப்பும் நிதிச் சேவைகள், பொறிக்கருவிகள், துணி, தையல் இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள், மாப்பொருள், சுற்றுலா, உரம், மிதிவண்டி, உடை தொழிலகங்களும் பைன் எண்ணெய் மற்றும் சீனி பதன்செய் தொழில்களும் மற்ற முதன்மையான தொழில்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள எஃகு உருட்டாலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன; இவை பதேகாட் சாகிபு மாவட்டத்தில் "எஃகு நகரம்" எனப்படும் மண்டி கோபிந்த்கரில் அமைந்துள்ளன.