பாலிங் பேச்சு
பாலிங் பேச்சு என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைத / From Wikipedia, the free encyclopedia
பாலிங் பேச்சு அல்லது பாலிங் பேச்சுவார்த்தை என்பது (மலாய்: Rundingan Damai Baling; ஆங்கிலம்: Baling Talks; சீனம்: 打包演講) மலேசியா, கெடா மாநிலத்தின் பாலிங் நகரத்தில், 1955 டிசம்பர் மாதம் 28 - 29-ஆம் தேதிகளில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Communist Party of Malaya - CPM); மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையாகும். பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் (Government English School) நடைபெற்றது.[1]
அமைப்பு | மலாயா அவசர காலத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தை |
---|---|
இடம் | பாலிங் ஆங்கிலப்பள்ளி Government English School Baling |
முத்திரையிட்டது | 28 திசம்பர் 1955 (1955-12-28) |
முடிவுக்காலம் | 29 திசம்பர் 1955 (1955-12-29) |
மத்தியஸ்தர்கள் | டேவிட் மார்ஷல் |
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் | துங்கு அப்துல் ரகுமான் [சின் பெங்]] |
தரப்புகள் | மலாயா அரசாங்கம் மலாயா கம்யூனிஸ்டு கட்சி |
மொழிகள் | ஆங்கிலம்; மலாய் மொழி |
பாலிங் | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°21′36″N 100°32′59″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[2][3]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங்; அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[4]
ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.