மேல் மெசொப்பொத்தேமியா
From Wikipedia, the free encyclopedia
மேல் மெசொப்பொத்தேமியா (Upper Mesopotamia) வடக்கு மெசொப்பொத்தேமியாவின் தற்கால மத்திய கிழக்கின் வடக்கில் உள்ள வடமேற்கு ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி நாடுகளில் அமைந்த மேட்டு நிலங்களையும், சமவெளிப் பகுதிகளையும் குறிக்கும்.[1] தற்கால ஈராக்கின் தெற்குப் பகுதிகள் கீழ் மெசொப்பொத்தேமியா ஆகும்.
கிபி எழாம் நூறாண்டின் நடுவில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்புகளுக்குப் பின்னர் [2] மெசொப்பொத்தேமியா பகுதிகளை, அரபு மொழியில் அல்-ஜெசிரா என அழைக்கப்படுகிறது. யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் மெசொப்பொத்தேமியாவை தீவுப் பகுதியாக மாற்றியுள்ளது.
மேல் மெசொப்பொத்தேமியா பிரதேசத்தின் தெற்கில், அனதோலியா மலைத்தொடர்கள், கிழக்கில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் இடது கரை வரையும், மேற்கில் டைகிரிஸ் ஆற்றின் வலது கரை வரை படர்ந்துள்ளது. மேலும் துருக்கியில் உற்பத்தியாகும் காபூர் ஆறு மேல் மெசொப்பொத்தேமியாவில் 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது.
ஈராக் நாட்டின் நினிவே ஆளுநரகம் வரை மேல் மெசொப்பொத்தேமியாவின் கிழக்குப் பகுதி பரந்துள்ளது. மேல் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் துருக்கி மாகாணங்களான சன்லியுர்பா, மார்டின் மற்றும் தியர்பக்கிர் மாகாணத்தின் பகுதிகள் அமைந்துள்ளது.
மேல் மெசொப்பொத்தேமியாவின் புகழ்பெற்ற நகரங்களாக சிரியாவின் தீர் எஸ்-சோர், அல்-றக்கா, அல்-அசகா, குவாமிசிலி நகரங்கள் மற்றும் ஈராக்கின் மோசுல், சாமர்ரா மற்றும் அல் நசிரியா நகரங்கள் விளங்குகிறது.
மேல் (வடக்கு) மெசொப்பொத்தேமியாவின் மேற்கில் உள்ள சிரியாவின் அல்-அசகா மாகாணத்தை சிரியாவின் தானியக் களஞ்சியம் எனப்பெயர் பெற்றது.[3] இதன் தெற்கில் கீழ் மெசொப்பொத்தேமியா அமைந்துள்ளது.