திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்
From Wikipedia, the free encyclopedia
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் (annexation of Tibet by the People's Republic of China), இந்நிகழ்வை திபெத்தின் அமைதியான விடுதலை என சீனப் பொதுவுடமைக் கட்சியும்[7][8][9] மற்றும் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு என திபெத்தியர்களின் மைய நிர்வாகம் [10]மற்றும் திபெத்திய மக்களும் அழைக்கின்றனர்.[11]சீனாவிற்கும், திபெத்திற்கும் 6 அக்டோபர் 1950 முதல் 23 மே 1951 முடிய நடைப்பெற்ற பனிப்போர் முடிவில்[12][13], 1951-இல் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தம்[14] மூலம் திபெத் நாடு, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
திபெத் (1912–1951) | சீனா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வாங் சன்கிராப் தூடோப் கபோய் கவாங் ஜிக்மே (கைதி)[2] லாலு சேவாங் தோர்ஜி \[3] | மா சே துங் சோ என்லாய் சான் குவாஹூவா பான் மிங் |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
திபெத்திய இராணுவம்[4] | சீன மக்கள் விடுதலை இராணுவம் [5][6] |
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத்திய அரசாங்கம் மற்றும் திபெத்திய சமூக அமைப்புகள் செயல்பட்டது. 1959 திபெத்தியக் கிளர்ச்சியின் போது, திபெத்திய பௌத்த மத குருவாக இருந்த 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்திலிருந்து நாடு கடந்து, இந்தியாவில் 28 ஏப்ரல் 1959 அன்று நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். எனவே திபெத்தில் இருந்த திபெத்திய அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் கலைக்கப்பட்டது.[15][16]