யூசுப் இசாக்
முதலாவது சிங்கப்பூர் அதிபர் / From Wikipedia, the free encyclopedia
யூசுப் இசாக் (ஆங்கிலம்: Yusof bin Ishak; மலாய்: Yusof bin Ishak Al-Haj; ஜாவி: يوسف بن عشاء; சீனம்: 尤索夫·宾·伊萨克); என்பவர் சிங்கப்பூரின் முதலாவது அதிபர். 1965-ஆம் ஆண்டில் இருந்து 1970-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர். அந்த நாட்டின் வரலாற்றில் முதல் அதிபர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.[1]
மேதகு யூசுப் இசாக் Yusof Ishak DUT SK DUBC PJG | |
---|---|
சிங்கப்பூரின் 1-ஆவது அதிபர் | |
பதவியில் 9 ஆகஸ்டு 1965 – 23 நவம்பர் 1970 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | பெஞ்சமின் சியர்ஸ் |
1-ஆவது யாங் டி பெர்துவா சிங்கப்பூரா | |
பதவியில் 16 செப்டம்பர் 1963 – 9 ஆகஸ்டு 1965 | |
ஆட்சியாளர் | பெர்லிஸ் புத்ரா |
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் |
முன்னையவர் | யாங் டி பெர்துவா சிங்கப்பூரா |
பின்னவர் | இப்போது இல்லை |
2-ஆவது யாங் டி பெர்துவா சிங்கப்பூரா | |
பதவியில் 3 டிசம்பர் 1959 – 16 செப்டம்பர் 1963 | |
ஆட்சியாளர்கள் | இரண்டாம் எலிசபெத் மலேசியாவின் முதல் அகோங் சுல்தான் இசாமுடின் ஆலாம் ஷா |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | சர் வில்லியம் கூட் |
பின்னவர் | இப்போது இல்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யூசுப் பின் இசாக் அல்-ஹாஜ் (1910-08-12)12 ஆகத்து 1910 பாடாங் காஜா, தெரோங், தைப்பிங், பேராக், மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு |
இறப்பு | 23 நவம்பர் 1970(1970-11-23) (அகவை 60) சிங்கப்பூர் |
காரணம் of death | இதய செயலிழப்பு |
இளைப்பாறுமிடம் | கிராஞ்சி அரசக் கல்லறை |
தேசியம் | சிங்கப்பூரியர் |
துணைவர் | நூர் ஆயிஷா முகமது சலீம் (தி. 1949–1970) (பிற்ப்பு: 1933) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | விக்டோரியா பள்ளி இராபிள்ஸ் கல்லூரி |
வேலை |
|
இணையத்தளம் | http://www.istana.gov.sg/ |
அவர் பதவி ஏற்ற காலத்தில் அந்தப் பதவி யாங் டி பெர்துவா சிங்கப்பூரா என்று அழைக்கப் பட்டது. அதிபராவதற்கு முன்னர் இவர் சிங்கப்பூரில், நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர். உத்துசான் மெலாயு (Utusan Melayu) எனும் மலாய் நாளிதழை உருவாகியவர்களில் ஒருவராகும். இந்த நாளிதழ் 2019 அக்டோபர் 9-ஆம் தேதி வரையில் புழக்கத்தில் இருந்தது.
1929-ஆம் ஆண்டில் இராபிள்ஸ் கல்லூரியில் (Raffles Institution) பட்டம் பெற்றார். 1932-ஆம் ஆண்டில், அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வார்த்தா மலாயா (Warta Malaya) எனும் பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டில் அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியேறி, உத்துசான் மெலாயு மலாய் நாளிதழைத் தோற்றுவித்தார்.[2]