1959 திபெத்தியக் கிளர்ச்சி
1959 சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சி 1951-இல் திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்த / From Wikipedia, the free encyclopedia
1959 சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சி (1959 Tibetan uprising or the 1959 Tibetan rebellion) 1951-இல் திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்த பின்னர்[11], திபெத் நாடானது, 1955-இல் சீனாவின் ஒரு நிர்வாகப் பகுதியாக மாற்றப்பட்டது. இதனை திபெத்திய மக்கள் ஏற்காது தொடர்ந்து அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவை சீன அரசு கைது செய்து விடுவார்களோ எனற அச்சத்தின் காரணமான, 10 மார்ச் 1959 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் சீன அரசுக்கு எதிரராக திபெத்திய போராளிகள், பௌத்த பிக்குகள், திபெத்திற்கு கிழக்கில் உள்ள காம் மாகாண காம்பா மக்கள், திபெத்தை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சிகளை தொடங்கினர்.[12][13]ஆனால் ஜெனரல் தான் குவான்சான் தலைமையிலான சீன இராணுவத்தினர் 23 மார்ச் 1959 அன்று சீனாவிற்கு திபெத்தியர்களின் கிளர்ச்சியை போரிட்டு ஒடுக்கினர். இந்த கிளர்ச்சியில் 2,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் திபெத்தியர்கள் காயமடைந்தனர்.
1959 திபெத்தியக் கிளர்ச்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
கிளர்ச்சியின் போது திபெத்தியப் படைத்தலைவர் சரோங் மற்றும் திபெத்திய பௌத்த பௌத்த பிக்குகளை, சீன இராணுவத்தால் கைதி செய்யப்படல். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
திபெத்தியர்கள், காம் மாகாண காம்பா கிளர்ச்சியாளர்கள் மற்றும் போராளிகள்
கிழக்கு திபெத்தில் கிளர்ச்சி: | சீன மக்கள் குடியரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பல்வேறு சீன எதிர்ப்புத் தலைவர்கள் [6] | ஜெனரல் தான் குவான்சான் [7] | ||||||
இழப்புகள் | |||||||
காயமுற்றோர் 85,000–87,000 [8] [9][10] | 2,000 கொல்லப்பட்டனர் |