2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்திய நிலப்பிரச்சனை தீர்ப்பு / From Wikipedia, the free encyclopedia
2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்லாண்டுகளாக நிலவி வந்த இந்து - முஸ்லீம்களிடையே நடைபெற்ற அயோத்தி சிக்கல் வழக்கினை, 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு ஒருமனதாக தீர்ப்பு வழங்கி முடித்து வைத்தனர்.[3] இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, இந்திய அரசால் புதிதாக நிறுவப்படும் அறக்கட்டளையிடம் வழங்கியும், அந்நிலத்தில் (ராம ஜென்ம பூமியில்) இராமர் கோயில் கட்டவும் உத்தரவு இட்டுள்ளது. மேலும் அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு கட்டிடங்கள் கட்டிக் கொள்ள, ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு விலையின்றி உத்தரப் பிரதேச வக்ப் வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
விரைவான உண்மைகள் 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதிமன்றம் ...
2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு | |
---|---|
வார்ப்புரு:Infobox court case/images | |
நீதிமன்றம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
வழக்கின் முழுப்பெயர் | எம். சித்திக் எதிர் மகந்த் சுரேஷ் தாஸ் & பிறர் |
தீர்ப்பு நாள் | நவம்பர் 9, 2019 (2019-11-09) |
Citation(s) | [1][2] |
Case history | |
Appealed from | அலகாபாத் உயர் நீதிமன்றம் |
Appealed to | இந்திய உச்ச நீதிமன்றம் |
Court membership | |
Judges sitting | ரஞ்சன் கோகோய், தனஞ்செயன் ஒய். சந்திரசூட், சரத் அரவிந்த் போப்டே, எஸ், அப்துல் நசீர், அசோக் பூசன் |
Concurrence | 5 |
Dissent | இல்லை; ஒருமனதான தீர்ப்பு |
மூடு