ராம ஜென்ம பூமி
ராமர் பிறந்தார் என கூறப்படும் இடங்களில் இதுவும் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
இராம ஜென்ம பூமி, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தின், அயோத்தியில் இராமர் பிறந்தார். இப்பகுதியே இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், சரயு ஆற்றின் கரையில் உள்ள கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக பிறந்தார் என இராமாயணம் எனும் இதிகாசத்தில் விளக்கப்பட்டுள்ளது. முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ராம ஜன்ம பூமியும் ஒன்று. இங்கு குழந்தை இராமர் கோயில் அமைந்துள்ளது.
இராம ஜென்ம பூமி | |
---|---|
இருப்பிடம் | அயோத்தி |
பகுதி | உத்தரப் பிரதேசம் |
ஆயத்தொலைகள் | 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943 |
பகுதிக் குறிப்புகள் | |
உரிமையாளர் | உத்தரப் பிரதேச அரசு |
இராம ஜென்மபூமி உத்திரப் பிரதேசத்தின், பைசாபாதிலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும், லக்னோவிலிருந்து கிழக்கே 136 கிலோ மீட்டர் தொலைவில், சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.
மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், இங்கிருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528-இல் தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. ,[1][2] மேலும், முகலாய மன்னர் பாபர் 1528ல் தனது படை தளபதியை வைத்து வாங்கி பள்ளிவாசல் கட்டியதாக கூறப்படுகிறது. 1528 முதல் 1853 வரை இசுலாமியர்களின் தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தது.[3]
இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியா அரசினர், 1863 முதல் 1949 முடிய இவ்விடத்தில் இந்துக்களும் இசுலாமியர்களும் வழிபட வேண்டும் என கூறி இவ்விடத்தை இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து அவ்விடத்தில், இந்துக்கள் வழிபடக்கூடிய இராமர் சிலையை வைத்து விட்டு அங்கு இராமர் கோவிலை கட்ட வேண்டும் எனக்கூறி வருகிறது. முஸ்லிம்கள் அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் என்று போராடி வருகின்றனர்