அயோத்திப் பிரச்சினை
From Wikipedia, the free encyclopedia
அயோத்தி சிக்கல் (Ayodhya dispute) என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.
இந்திய உச்ச நீதிமன்றம் 9 நவம்பர் 2019 அன்று அயோத்தி சிக்கலுக்கான தீர்ப்பு வழங்கியதன், பல நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக நடைபெற்ற அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் சர்ச்சை முடிவு கட்டப்பட்டது.