அயோத்தி இராமர் கோயில்
இந்தியாவின் அயோத்தியில் உள்ள பால இராமர் கோயில் / From Wikipedia, the free encyclopedia
இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமர், அயோத்தியில் பிறந்த இடமாக கருதப்படும் ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயில் ஆகும்.[3][4] இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், அயோத்தி மாவட்டத்தின் அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது.[5]
அயோத்தி இராமர் கோயில் | |
---|---|
இராம ஜென்ம பூமி கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
அமைவு: | ராம ஜென்ம பூமி, அயோத்தி |
ஆள்கூறுகள்: | 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943 |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டடக் கலைஞர்: | சோமபுரா குடும்பம்[lower-alpha 1] |
கோயில் அறக்கட்டளை: | ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை |
இணையதளம்: | Shri Ram Janmbhoomi Teerth Kshetra |
இராமாயண காவியத்தின்படி, இராமர் அயோத்தியில் பிறந்தார். எனவே அயோத்தி இந்துக்களுக்கு ஏழு மிகவும் புனிதமான நகரங்களில் (சப்த புரி) ஒன்றாகும். பொ.ஊ. 1528 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் பாபரின் ஆணையின்படி, இராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் இராம ஜென்ம பூமியின் தளத்தில் இருந்த குழந்தை இராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் சர்ச்சை எழுந்தது மற்றும் 1980-களில் சங்கப் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு (ராம் லல்லா) கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது, 9 நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று, விசுவ இந்து பரிசத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்த, கரசேவர்கள் என்றழைக்கப்பட்ட ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பேரணி பாபர் மசூதியை இடித்தது.
இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு உரிமை மற்றும் சட்ட மோதல்களும் நடந்தன. 2010 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மகாசபாவிற்கு ஒரு பங்கு, மசூதி அமைப்பதற்காக இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு ஒரு பகுதி மற்றும் இந்து மதப் பிரிவினர் நிர்மோகி அகாராவிற்கு ஒரே பங்கு எனக் கூறியது. இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2019-ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகுதான், சர்ச்சைக்குரிய நிலமானது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். இக்கோயில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை சார்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் இருக்கும். இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 ஆகத்து 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. மேலும் 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது.[4][6]