மூன்றாம் நக்காடா
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் நக்காடா காலம் (Naqada III) இது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் இறுதிக் காலம் ஆகும். மூன்றாம் நக்காடா மன்னர்கள் கிமு 3,200 முதல் கிமு 3,000 வரை பண்டைய எகிப்தை ஆண்டனர்.[1] நக்காடா பண்பாட்டுக் காலத்தில், எகிப்தை ஆண்ட மூன்று மன்னர்களின் பெயர்கள் மட்பாண்டங்களிலும், நினைவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நக்காடா காலம் | |
---|---|
[[File: மூன்றாம் நக்காடா (Egypt) | |
புவியியல் பகுதி | பண்டைய எகிப்திய சமயம் |
காலப்பகுதி | துவக்க வெண்கலக் காலம் I |
காலம் | ஏறத்தாழ கிமு 3,200 – கிமு 3,150 |
முக்கிய களங்கள் | நக்காடா |
முந்தியது | இரண்டாம் நக்காடா பண்பாட்டுக் காலம் |
பிந்தியது | வரலாற்றுக்கு முந்தைய எகிப்து |
மூன்றாம் நக்காடா காலத்தில் மேல் எகிப்தின் நைல் நதி கரைகளில் தினீஸ், நக்காடா மற்றும் நெக்கென் போன்ற சிறிய நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது. பண்டைய எகிப்தில் மூன்றாம் நக்காடா காலம் கிமு 3200 முதல் கிமு 3000 வரை விளங்கியது.கிமு 3200 ஆண்டின் முற்பகுதியில் மேல் எகிப்தை மன்னர் மன்னர் கா ஆட்சி செய்தார். நக்காடா இராச்சிய மன்னர் தினீஸ் மற்றும் நெக்கென் நகர இராச்சியங்களை வென்று, பின் கீழ் எகிப்தின் நைல் நதியின் வடிநிலப்பகுதிகளையும் வென்றார்.
பெரும்பாலான எகிப்தியவியல் அறிஞர்கள், மன்னர் நார்மெரை, வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் இறுதி மன்னராகவும், எகிப்தின் துவக்க அரசமரபின் முதல் மன்னராகவும் கருதுகின்றனர். இவர் முதலை மன்னருக்கு பின்னர் எகிப்தை ஆட்சி செய்தவராக கருதப்படுகிறார். [2]
வண்டல் கல்லிலான நார்மெர் கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[3] மேலும் கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதியில் வரலாற்று காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள் வழிபட்ட வளைந்த கொம்புடன் கூடிய பசு தேவதையின் சிற்பம் உள்ளது.[4]