மலாயா தேசிய விடுதலை இராணுவம்
மலாயாவில் கம்யூனிச இராணுவம் / From Wikipedia, the free encyclopedia
மலாயா தேசிய விடுதலை இராணுவம் (ஆங்கிலம்: Malayan National Liberation Army (MNLA) அல்லது (Malayan Races Liberation Army); மலாய்: Tentera Pembebasan Rakyat Malaya; சீனம்: 马来亚民族解放军) என்பது 1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மலாயாவில் உருவாக்கப்பட்ட ஒரு கம்யூனிச கெரில்லா இராணுவம் ஆகும். 1989-ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் இயங்கி வந்தது.
மலாயா தேசிய விடுதலை இராணுவம்
Malayan National Liberation Army | |
---|---|
馬來亞民族解放軍 Tentera Pembebasan Rakyat Malaya | |
மலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் கொடி | |
தலைவர்கள் | |
செயல்பாட்டுக் காலம் | 1949 (1949)–1960; 1968–1989 (1989) |
முன்னோடி |
|
செயல்பாட்டுப் பகுதி(கள்) | வடக்கு மலாயா; தெற்கு தாய்லாந்து |
சித்தாந்தம் |
|
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
அளவு | 8,000[1][2][3] |
பற்று | மலாயா கம்யூனிஸ்டு கட்சி |
குழு(க்கள்) | 10-ஆவது மலாய் படையணி |
எதிரிகள் | ஐக்கிய இராச்சியம்
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் |
இந்த இராணுவ அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவை ஆக்கிரமித்த சப்பானியர்களுக்கு எதிராக முயற்சிகளை மேற்கொண்ட தன்னார்வ இராணுவ அமைப்பாகவும் செயல்பட்டது..
மலாயா அவசரகாலத்தின் (1948-1960) (Malayan Emergency) போது ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா விடுதலை (Malayan Independence) பெறுவதற்காக தேசிய விடுதலைப் போரை நடத்தியது. பின்னர், இதே இராணுவ அமைப்பு, மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) எனும் கம்யூனிச கிளர்ச்சியிலும் ஈடுபட்டது.