உரோமைப் பேரரசு
உரோமைக் குடியரசுக்குப் பிந்தைய ஏகாதிபத்திய உரோமின் காலம் (பொ. ஊ. மு. 27 - பொ. ஊ. 1453) / From Wikipedia, the free encyclopedia
உரோமைப் பேரரசு (Roman Empire) என்பது பண்டைய உரோமின் குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலம் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின் நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர். முதலாவது உரோமைப் பேரரசராகச் சீசர் அகத்தசின் பொறுப்பேற்பு முதல், 3ஆம் நூற்றாண்டின் இராணுவ, அரசற்ற நிலை வரை இது உரோமை இத்தாலியை இதன் மாகாணங்களின் முதன்மைப் பகுதியாகக் கொண்டிருந்தது. உரோம் நகரம் இதன் ஒரே தலைநகராக இருந்தது. இப்பேரரசானது பிறகு பல பேரரசர்களால் ஆளப்பட்டது. அவர்கள் மேற்கு உரோமைப் பேரரசு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். உரோம் நகரமானது இந்த இரண்டு பேரரசுகளின் பெயரளவிலான தலைநகரமாகத் தொடர்ந்திருந்தது. இந்நிலை பொ. ஊ. 476 வரை நீடித்தது. அந்த ஆண்டு ஏகாதிபத்திய முத்திரையானது மேற்குத் தலைநகரமான இராவென்னாவைச் செருமானியக் காட்டுமிராண்டிகள் கைப்பற்றியதற்குப் பிறகு கான்ஸ்டான்டினோபிலுக்கு அனுப்பப்பட்டது. பொ. ஊ. 380இல் உரோமைப் பேரரசின் அரசு சமயமாக கிறித்தவம் பின்பற்றப்பட்டது மற்றும் செருமானிய மன்னர்களிடம் உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது ஆகியவை பாரம்பரியக் காலத்தின் முடிவையும், நடுக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கின்றன. இந்த நிகழ்வுகள் மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசு படிப்படியாக எலனிய மயமாக்கப்பட்டது ஆகிய காரணங்களால் கிழக்குப் பகுதிகளில் நீடித்திருந்த நடுக் கால உரோமைப் பேரரசை பிரித்து அறிவதற்காக வரலாற்றாளர்கள் அப்பேரரசைப் பைசாந்தியப் பேரரசு என்று குறிப்பிடுகின்றனர்.
உரோமைப் பேரரசு
Βασιλεία τῶν Ῥωμαίων (பண்டைக் கிரேக்கம்) பாசிலேயா தோன் உரோமையோன் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 27 – பொ.ஊ. 395 (ஒன்றுபட்ட பேரரசு)[2] பொ.ஊ. 395 – பொ.ஊ. 476/480 (மேற்கு உரோமைப் பேரரசு) பொ.ஊ. 395 – பொ.ஊ. 1453 (கிழக்கு உரோமைப் பேரரசு) | |||||||||||
நிலை | பேரரசு | ||||||||||
தலைநகரம் |
| ||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||
சமயம் |
| ||||||||||
மக்கள் | உரோமானியர் | ||||||||||
அரசாங்கம் | உரிமை ரீதியில் குடியரசு, நடைமுறை ரீதியில் பகுதியளவு தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான முடியரசு | ||||||||||
பேரரசர் | |||||||||||
• பொ. ஊ. மு. 27 – பொ. ஊ. 14 | அகத்தசு (முதல்) | ||||||||||
• 98–117 | திராயான் | ||||||||||
• 138–161 | அந்தோனியசு பையசு | ||||||||||
• 270–275 | அரேலியன் | ||||||||||
• 284–305 | தியோக்லெதியன் | ||||||||||
• 306–337 | முதலாம் கான்ஸ்டன்டைன் | ||||||||||
• 379–395 | முதலாம் தியோடோசியஸ்[lower-alpha 5] | ||||||||||
• 474–480 | யூலியசு நெபோசு[lower-alpha 6] | ||||||||||
• 475–476 | உரோமுலசு அகத்தசு | ||||||||||
• 527–565 | முதலாம் ஜஸ்டினியன் | ||||||||||
• 610–641 | எராக்கிளியசு | ||||||||||
• 780–797 | ஆறாம் கான்சுடான்டைன்[lower-alpha 7] | ||||||||||
• 976–1025 | இரண்டாம் பாசில் | ||||||||||
• 1143–1180 | முதலாம் மானுவேல் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் முதல் பிந்தைய நடுக் காலம் | ||||||||||
• அக்தியம் போர் | பொ. ஊ. மு. 32 – பொ. ஊ. மு. 30 | ||||||||||
• பேரரசு நிறுவப்பட்டது | 30 – 2 பொ. ஊ. மு. | ||||||||||
• ஆக்தேவியனுக்கு அகத்தசு என்று பெயரிடப்பட்டது | 16 சனவரி, 27 பொ. ஊ. மு. | ||||||||||
11 மே 330 | |||||||||||
• இறுதி கிழக்கு-மேற்குப் பிரிவு | 17 சனவரி 395 | ||||||||||
• உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்படுதல் | 4 செப்டம்பர் 476 | ||||||||||
• யூலியசு நெபோசின் கொலை | 9 மே 480 | ||||||||||
• நான்காம் சிலுவைப் போர் | 12 ஏப்ரல் 1204 | ||||||||||
• கான்சுடான்டினோப்பிள் மீண்டும் கைப்பற்றப்படுதல் | 25 சூலை 1261 | ||||||||||
29 மே 1453 | |||||||||||
• திரெபிசோந்தின் வீழ்ச்சி | 15 ஆகத்து 1461 | ||||||||||
பரப்பு | |||||||||||
பொ. ஊ. மு. 25[6] | 2,750,000 km2 (1,060,000 sq mi) | ||||||||||
பொ. ஊ. 117[6][7] | 5,000,000 km2 (1,900,000 sq mi) | ||||||||||
பொ. ஊ. 390[6] | 3,400,000 km2 (1,300,000 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• பொ. ஊ. மு. 25[8] | 5,68,00,000 | ||||||||||
நாணயம் | செசுதேர்தியசு,[lower-alpha 8] அரேயசு, சோல்தியசு, நோமிசுமா | ||||||||||
|
உரோமைப் பேரரசுக்கு முன்னர் இருந்த அரசான உரோமைக் குடியரசானது உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் சண்டைகளால் கடுமையாக உறுதித் தன்மை குலைந்திருந்தது. பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூலியசு சீசர் நிரந்தரச் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். பிறகு பொ. ஊ. மு. 44இல் அரசியல் கொலை செய்யப்பட்டார். உள்நாட்டுப் போர்களும், நாடு கடத்தல்களும் தொடர்ந்தன. பொ. ஊ. மு. 31ஆம் ஆண்டு அக்தியம் யுத்தத்தில் மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாற்றாவுக்கு எதிராக ஆக்தேவியனின் வெற்றியில் இப்பிரச்சினைகள் இறுதியாக உச்சத்தை அடைந்தன. அதைத் தொடர்ந்த ஆண்டில் ஆக்தேவியன் எகிப்தின் தாலமி இராச்சியத்தை வென்றார். பொ. ஊ. மு. 4ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்தரின் படையெடுப்புகள் மூலம் தொடங்கிய எலனியக் காலத்தை முடித்து வைத்தார். ஆக்தேவியனின் சக்தியானது அதிகமாகியது. உரோமை செனட் சபையானது ஒட்டு மொத்த சக்தியையும், அகத்தசு என்ற புதிய பட்டத்தையும் அவருக்கு வழங்கியது. அவரை முதல் உரோமைப் பேரரசர் ஆக்கியது. இத்தாலி தவிர்த்த பரந்த உரோமை நிலப்பரப்புகள் செனட் மற்றும் ஏகாதிபத்திய மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. இத்தாலி தொடர்ந்து முதன்மை நிலமாக இருந்தது.
உரோமைப் பேரரசின் முதல் இரண்டு நூற்றாண்டுகளானது அதற்கு முன்னர் கண்டிராத நிலைத் தன்மையையும், செழிப்பையும் உடைய காலத்தைக் கண்டது. இது பாக்ஸ் உரோமானா (பொருள்: உரோமை அமைதி) என்று அறியப்படுகிறது. உரோம் அதன் உச்சபட்ச நிலப்பரப்பு விரிவாக்கத்தை திராயனின் (பொ. ஊ. 98–117) ஆட்சியின் போது அடைந்தது. கமதசுவின் (பொ. ஊ. 177–192) ஆட்சியில் அதிகரித்து வந்த பிரச்சினைகளுடன், வீழ்ச்சிக் காலமானது தொடங்கியது. 3ஆம் நூற்றாண்டில் பேரரசின் நிலையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஒரு பிரச்சனையின் கீழ் இது சென்றது. அது கெளல் மற்றும் பல்மைரேனியப் பேரரசுகள் உரோமைச் செனட் சபையில் இருந்து பிரிந்து சென்றது ஆகும். பெரும்பாலும் உரோமை இலீசியன்களை சேர்ந்த ஒரு தொடர்ச்சியான, குறுகிய காலமே பதவி வகித்த பேரரசர்கள் பேரரசுக்குத் தலைமை தாங்கினர். அரேலியனுக்குக் (பொ. ஊ. 270–275) கீழ் பேரரசு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. இதை நிலைப்படுத்த தியோக்லெதியன் இரண்டு வெவ்வேறு ஏகாதிபத்திய அவைகளை கிரேக்கக் கிழக்கு மற்றும் இலத்தீன் மேற்கில் 286இல் அமைத்தார். பொ. ஊ. 313ஆம் ஆண்டின் மிலன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொ. ஊ. 4ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர். இதற்குப் பிறகு சீக்கிரமே இடம் பெயர்தல் காலத்தில் ஏற்பட்ட செருமானிய மக்கள் மற்றும் அட்டிலாவின் ஊணர்கள் ஆகியோரின் பெரிய படையெடுப்புகள் மேற்கு உரோமைப் பேரரசின் பலவீனத்திற்கு வழி வகுத்தன. செருமானிய எருலியர்களிடம் இராவென்னா வீழ்ந்தது மற்றும் பொ. ஊ. 476இல் ஒதோசரால் உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு உரோமைப் பேரரசு இறுதியாக வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசர் செனோ அதிகாரப் பூர்வமாக பொ. ஊ. 480இல் இதைக் கலைத்தார். கிழக்கு உரோமைப் பேரரசானது மேலும் ஒரு 1,000 ஆண்டுகளுக்கு, 1453இல் இரண்டாம் மெகமுது தலைமையிலான உதுமானியத் துருக்கியர்களிடம் கான்ஸ்டான்டினோபில் வீழ்ந்தது வரை எஞ்சிப் பிழைத்திருந்தது.[lower-alpha 9]
உரோமைப் பேரரசின் பரந்த நிலப்பரப்பு மற்றும் நீண்ட காலம் நீடித்திருந்த தன்மை ஆகியவற்றின் காரணமாக, உரோமின் அமைப்புகளும், பண்பாடும் இது அமைந்திருந்த நிலப்பரப்பில் மொழி, சமயம், கலை, கட்டடக் கலை, இலக்கியம், தத்துவம், நீதி மற்றும் அரசாங்க வகைகளின் வளர்ச்சி மீது ஆழ்ந்த மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உரோமானியர்களின் இலத்தீன் மொழியானது நடுக்கால மற்றும் நவீன உலகின் உரோமானிய மொழிகளாகப் பரிணாமம் அடைந்துள்ளது. அதே நேரத்தில், நடுக் காலக் கிரேக்க மொழியானது கிழக்கு உரோமைப் பேரரசின் மொழியானது. பேரரசு கிறித்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கிய நிகழ்வு நடுக்காலக் கிறித்தவ உலகத்தின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. இத்தாலிய மறுமலர்ச்சி மீது உரோமானிய மற்றும் கிரேக்கக் கலையானது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உரோமனெஸ்க், மறுமலர்ச்சி மற்றும் புதிய பாரம்பரியக் கட்டடக் கலை ஆகியவற்றுக்கு அடிப்படையாக உரோமின் கட்டடப் பாரம்பரியம் திகழ்கிறது. இஸ்லாமியக் கட்டடக் கலை மீதும் இது வலிமையான தாக்கத்தைக் கொண்டுள்ளது. நடுக்கால ஐரோப்பாவில் கிரேக்க மற்றும் உரோமானிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் மறு கண்டுபிடிப்பானது (இது இஸ்லாமிய அறிவியலுக்கும் அடிப்படையாக உள்ளது) அறிவியல் மறுமலர்ச்சி மற்றும் புரட்சிக்கு வழி வகுத்தது. உரோமைச் சட்டத் தொகுப்பானது பிரான்சின் நெப்போலியச் சட்டங்கள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பல நவீன நீதி அமைப்புகளைத் தனது வழித் தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உரோமின் குடியரசு அமைப்புகள் ஒரு நீடித்திருக்கக் கூடிய மரபை விட்டுச் சென்றுள்ளன. அவை நடுக் காலத்தின் இத்தாலிய நகர அரசுக் குடியரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஆரம்ப காலம் மற்றும் பிற நவீன சனநாயகக் குடியரசுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.