மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989)
மலேசியாவில் நடந்த ஆயுத மோதல் (1968 - 1989) / From Wikipedia, the free encyclopedia
மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) அல்லது மலேசியாவின் இரண்டாவது அவசரகாலம் (ஆங்கிலம்: Communist insurgency in Malaysia அல்லது (Second Malayan Emergency); மலாய்: Kebangkitan Semula Pengganas Komunis (1968-1989); சீனம்: 马来亚共产党叛乱 (1968年-1989年) என்பது 1968-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரையில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Malayan Communist Party) (MCP); மலேசியக் கூட்டரசு பாதுகாப்புப் படைகளுக்கும் (Malaysian Federal Security Forces) இடையே; மலேசியாவில் நடந்த ஆயுத மோதலைக் குறிப்பிடுவதாகும்.
மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) Communist Insurgency in Malaysia Kebangkitan Semula Pengganas Komunis (1968-1989) |
|||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர், மலாயா அவசரகாலம் பகுதி |
|||||||
1965-இல் கம்யூனிச கிளர்ச்சிக் காலத்தில் மலாயா - தாய்லாந்து எல்லையில் அரச ஆத்திரேலிய விமானப் படையின் உலங்கூர்தியில் இருந்து வெளியேறும் இபான் போர் வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
| கம்யூனிசப் படைகள்: மலாயா கம்யூனிஸ்டு கட்சி[13]
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
8,000[19][20][21][22] 1,000[23][24] |
|||||||
இழப்புகள் | |||||||
155 இறப்புகள் 854 காயம் அடைந்தோர்[25] | 212 இறப்புகள் 150 பிடிபட்டனர் 117 சரண் அடைந்தனர்[25] |
1960-ஆம் ஆண்டில் மலாயா அவசரகாலம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆயுதப் பிரிவான மலாயா தேசிய விடுதலை இராணுவம் (Malayan National Liberation Army) (MNLA), மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு (Malaysian-Thailand Border) பின்வாங்கியது.
பின்னர் மலேசிய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்காலத் தாக்குதல்களுக்காக மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு; மீண்டும் பயிற்சி பெற்றது. மலேசியாவில் நடந்த இந்தக் கம்யூனிசக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், பெரும்பாலோர் சீனர்கள் ஆகும்.